Search This Blog

Followers

Thursday, September 26, 2019

கலம் செய் கோவே!!

"ஆதிச்சநல்லூர் கலம் செய் கோவே ....."

"கலம் செய் கோவே! கலம் செய் கோவே!

அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய

சிறு வெண் பல்லி போலத் தன்னொடு

சுரம் பல வந்த எமக்கும் அருளி,

வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி

அகலிதாக வனைமோ" (புறநானூறு 256)

போரிலே கணவன் இறந்துவிடுகிறான். அவனை அடக்கம் செய்ய,  குயவன் ஈமத்தாழி செய்யப் போகிறான். அவனைப் பார்த்து, இறந்துபோன வீரனின் மனைவி, “தாழியை அகலமாக செய்யுங்கள், அவர் உடலுடன் சேர்ந்து என் உடலும் ஒன்றாக அடக்கம் செய்யப்படவேண்டும்” என்கிறாள்.

இது புறநானூறு காட்டும் காட்சி.  இது போன்ற இலக்கியங்கள் வேறு மொழிகளில் உள்ளனவா என்று தெரியவில்லை.

தாழியில் வைத்து அடக்கம் செய்யும் வழக்கம் சங்க காலத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் தமிழகத்தில் இருந்திருக்கிறது என்பதைப் பல்வேறு அகழ்வாய்வுகள் நமக்குப் புலப்படுத்துகின்றன.

கடந்த, 2004-06 ஆம் ஆண்டுகளில், ஆதிச்சநல்லூரில், பேரா.சத்தியமூர்த்தி தலைமையில், இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை (ARCHAEOLOGICAL SURVEY OF INDIA) நடத்திய அகழ்வாய்வின்போது 169 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் தாழி எண் 58 மற்றும் தாழி எண் 104, இவற்றிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், இவை முறையே கி.மு. 696-540 மற்றும் கி.மு. 905-806  ஆண்டுகளைச் சேர்ந்தவை என்று, கடந்த மார்ச் மாதம் அமரிக்காவில் ஃப்ளோரிடா உள்ள Beta Analytic Testing Laboratotires இல் நடந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

(https://www.thenewsminute.com/article/carbon-dating-proves-adichanallur-relics-905-696-bc-madras-hc-slams-asi-99557)

இதற்கிடையே,, கேன்பெர்ராவில் உள்ள Australian National University யைச் சேர்ந்த, பத்மநாதன் ராகவன் எனும் Bio anthropologist, இந்தத் தாழிகளில் உள்ள எலும்புக் கூடுகள் 3800 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கூறியிருக்கிறார். இந்த செய்தி, Skeletons dating back 3,800 years throw light on evolution எனும் தலைப்பில் 01.01.2006 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியாகியுள்ளது.
(https://timesofindia.indiatimes.com/home/science/Skeletons-dating-back-3800-years-throw-light-on-evolution/articleshow/1354201.cms)

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் ஊர் குயவர் பெருமக்கள் எவ்வளவு அழகாகத்  தாழிகளை வடிவமைத்திருக்கிறார்கள். இந்தக் கலை வளர எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்.
இது எப்போது தோன்றியிருக்கும்.

வாழும் நாளெல்லாம் தன கணவனோடு சேர்ந்து வாழ்ந்த நம் மகளிர் சாவிலும் அவனோடு சேர்ந்து செல்ல ஆசைப் பட்டிருக்கிறார்களே, இந்த பண்பாடு , நம் தமிழ்ப் பண்பாடு எவ்வளவு உயர்ந்து

நினைத்து நினைத்துப் பெருமைப் படலாமே.

No comments: