Search This Blog

Followers

Thursday, October 25, 2018

தமிழக கற்காலமும், தமிழர் தொன்மையும்

தமிழக  கற்காலமும்  தமிழர் தொன்மையும். 

1.5  மில்லியன்  ஆண்டுகள்  மேலான  பழம்பெரும்   தமிழகம் .

                                                                                                                       
• ''கல்  தோன்றி மண் தோன்றா காலத்து ...  முன்  தோன்றிய  மூத்தக்குடி '' எனும்  மனிதம்  மட்டுமல்ல  தமிழன் ... அந்தக்  கல்லோடு  அவன்  கண்ட  பரிணாமங்கள் 1.5 மில்லியன்  ஆண்டுகளுக்கு  மேலான  சரித்திர  சான்றுகளைத்  தமிழகத்தில்  கொண்டிருக்கிறது. 

                                                                   
                                                                                                       
• தமிழகத்தில் கீழைக்  கற்காலம்  கி.மு. 15,10,000 ல் தொடங்கி ,  புதிய கற்காலம்  கி.மு 1,000  வரை  நீட்டித்த  காலம்  என கணிக்கப்பெறுகிறது. உலகின் கற்காலத்தின்  தொன்மம்  இந்தியாவில்  இருந்து  பிறக்கிறது...  இருந்தபோதும்  மழை  விட்டும்  தூவானம்  விடாத   நிலை ; காரணம்  ஆப்பிரிக்காவில்  இருந்து  வந்தவன்  தமிழன்  எனும்  ஆய்வியலில்  எந்த  மாற்றமும்  இல்லை .
https://scroll.in/article/867235/indian-stone-tools-could-dramatically-push-back-the-date-when-modern-humans-first-left-africa?fbclid=IwAR0JPPBwBCUOqfhmbdJGUK05iLDb8YtmAJngMAxIPRq_HHGASYUNqQkmwOw

https://edition.cnn.com/2018/02/02/health/india-stones-history-ad-trnd/index.html?fbclid=IwAR1-UODLzm49D0RTZZtB_HFiH7rVXkuQUqOlsT7kZqH-UhDMYGBnWEecT50

https://www.smithsonianmag.com/smart-news/stone-tools-india-raise-questions-about-spread-ancient-technology-180968020/?fbclid=IwAR0ZfRZccadA9IUGJY5c9w8fv1Dz8A4iPlKjVm9_YZVJlinJTf75qpPvX8k



                                                                                                                             
• பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி
                                       -- இளங்கோ அடிகள்  -  சிலப்பதிகாரம்

                                                                                                       
• பஃறுளியாறு  - குமரிக்கோடு (குமரிக்கண்டம்) , வடதிசை  கங்கை -  இமயம்  என பாரதமெங்கும் ஆண்ட மன்னர்  வழி  மக்கள் சங்க  தமிழ்  மக்கள்.  மேலும்  சிந்து சமவெளி தொடங்கி 
அன்றைய  அகண்ட  பாரதம்  எனும்  பாகிசுதான் , பலுசிசுதான் , துர்க்மேனிசுதான் -  மேர்கர் , சிபி ,  வங்காள  தேசம் , காந்தாரம் , இலங்கை  எனவும் , தமிழின் சங்க  இலக்கியம்  சுட்டும்  பெருங் குன்றூர் , இரணியமுட்டம் , கோனூர்  இப்படி  பலவும்  தமிழரின்  நாகரிக  சான்றுகளுடன்  பல மகத்தான  தகவல்கள்  தந்து    கொண்டிருக்கும்  இக்கால வேளையில்  தமிழகத்தின்  கற்காலம்  15  லட்சம்  ஆண்டுகளுக்கு  மேலான தொன்மையைப்  பதிவு  செய்கிறது.  அந்த  தொன்மை  அத்திரம்பாக்கம்  சென்னை பல்லாவரத்தில்  ஆரம்பிக்கிறது...  தமிழக , இந்திய , உலக  கற்கால  வரலாற்றையே  திருத்துகிறது  .

                                                                                                                             
 • A recent discovery in Israel pointed to the possibility that modern humans migrated out of Africa 180,000 years ago. But stone tools unearthed in Attirampakkam have been found to be 385,000 years old.

                               
                                                                 
• அத்திரம் பாக்கம்
   http://arivomarivippom.blogspot.com/2016/03/blog-post_29.html

                                                                                                                       
                                                                                                                         

புரூஸ்புட் என்ற நிலவியல் ஆய்வர் 1863ல் சென்னை பல்லாவரம் அருகே சில கற்கருவிகளைக் கண்டு, இவை கற்கால மக்களின் ஆயுதங்கள் என  தெரிவித்தார். தொடர்ந்து  உள்ளூர் ஆய்வினர்  பலரும் கள ஆய்வு  கண்டு   கட்டுரைகளை  வெளியிட்டனர். புரூஸ்புட், பர்கிட், எச்.டி. சங்காலியா, வி.டி. கிருஷ்ணசாமி போன்ற  பலர்  இப்பணியில்  ஈடுபட்டனர்.

                                                                                                                     
 1916ல் புரூஸ்புட் தருமபுரி பகுதியிலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் சில கற்கருவிகளை கண்டெடுத்தார்.  அவற்றைப் போன்ற கல்லாயுதங்கள் வரட்டனபள்ளி அருகிலும் கப்பல் வாடியிலும் கண்டெடுக்கப்பட்டன.  இவை பழைய கற்காலத்தைச் சார்ந்தவை .

                                                                                                                   
இதற்கு முன்னர் குடியம் குகைப்பகுதியில் சுமார் 30 இடங்களில் கல்லாயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கல்லாயுதங்கள் செய்யும் தொழிற்  பட்டறைகளும், ஆதி
மனித வாழ்விடங்களும்  இருந்தமை  கண்டு  பிடிக்கப்பட்டன . இவை சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

                                                                                                       
தமிழகத்தில் தொல்லியல் ஆய்வு  தரவுகள்  130 ஆண்டுகளாக பெறப்பட்டு  வருகின்றன.  அவ்  அகழ்வாய்வுகளிலிருந்து வெளி வந்த செய்திகள்  இதற்கு முன் இருந்த கால அளவுகளின் முறையை மாற்றி அமைக்க வேண்டிய சூழலை  ஏற்படுத்தி உள்ளன.

                                                                                                                   

• தமிழக கற்காலம்.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?fbclid=IwAR3n3Bj5z_9Evs8i8KjIueuft1Is32F9FBfkmBS86IUFmLlzdSWNKIEoAeU

1.1  தமிழக பழங்கற்காலம்

1.1.1 தமிழக கீழைப் பழங்கற்காலம்
1.1.2 தமிழக மத்திய பழங்கற்காலம்
1.1.3 தமிழக மேலைப் பழங்கற்காலம்

2. தமிழக இடைக்கற்காலம் /  குறுனிக்கற்காலம்.

3.  தமிழக புதிய கற்காலம்

                                                                                                       
                                                                                                       
• தமிழகத்தில் கற்காலம் -  காலக்கோடு

                                                                                                                     
சுமார்  2 மில்லியன்  ஆண்டு --
தமிழக  பழங்கற்காலம் (இன்னும் கணிப்பில் இருக்கிறது)

சுமார் கிமு. 15,10,000  - 50,000 -
தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம்.

சுமார் கி.மு. 50,000 - 20,000 -
தமிழகத்தில் மத்திய பழங்கற்காலம்.

சுமார் கி.மு. 20,000 - 10,000 -
தமிழகத்தில் மேலைப் பழங்கற்காலம்

சுமார் கி.மு. 10,000 - 2,000 -
தமிழகத்தில் இடைக்கற்காலம் அல்லது
தமிழகத்தில் குறுனிக்கற்காலம்.

சுமார் கி.மு. 3000-1,000 -
தமிழகத்தில் புதிய கற்காலம்.

                                                                                                                           
• 1.1  தமிழக பழங்கற்காலம்

பழைய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள், குவார்ட்சைட் எனப்படும் கரடு முரடான கற்களை வேட்டையாட  பயன்படுத்தினர்.

தமிழகத்தில் பழங்கற்காலத்தின் ஆரம்ப காலம்  இன்னும்  கணிப்பில் இருக்கிறது. அதன் காரணம்  அத்திரம்பாக்கத்தில்  கி.மு. 15,10,000  காலம் மதிக்கத்தக்க பழமையான ''தழும்பழி'' ஆயுதங்கள் கிடைத்துள்ளதுதான்.

பழங்கற்காலக் கருவிகள் சென்னை - கொற்றலையாற்றின் சமவெளியிலும், வட மதுரையிலும்  காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ண கிரி, புதுக்கோட்டை, வட ஆர்க்காடு  மாவட்டங்களிலும் கண்டறியப்பட்டன. அவை  கரடுமுரடான கல்லால் ஆன கருவிகளோடு மரத்தாலான ஈட்டிகளையும் தண்டுகளையும்  கொண்டவை   மேலும் பண்டைய மக்களின் கல்திட்டைகள், கல்வட்டங்கள் முதலியன கண்டு பிடிக்கப்பட்டன. 
 

                                                                                                                               
 • 1.1.1  சுமார் கிமு. 15,10,000க்கு  - 50,000 -
          தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம்.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

கீழைப் பழங்கற்காலம் - அத்திரம்பாக்கம்

தமிழகத்தில்  கீழைப் பழங்கற்காலம்  கி.மு. 15,10,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்து கி.மு. 50,000 வரை நிலைத்தது ஆகும் . கீழைப் பழங்கற்காலம்  20  லட்சம் ஆண்டுகளுக்கு  மேலே செல்ல வாய்ப்பு  உண்டு ...ஆனால் மேற்படி ஆவண  ஆய்வுக்கு  உட்பட்டது.

சென்னையில் கீழைப்பழங்கற்கால ஆயுதங்களுடன் மனித எலும்பின் கால் துண்டுகள் கிடைத்தன .  இவை தமிழகத்திலும் கீழைப்பழங்கற்கால மனிதன் வாழ்ந்தான் என்பதுக்கு  ஆதாரமாய் விளங்குகிறது. முதலில் பெரிய குவாட் சயிட் பாறைகளில் நெருப்பை ஏற்றிச் சூடாக்கிய பின்னர் அதன் மேல் நீரை ஊற்றி பாறைகளைப் பிளந்து இவர்கள் ஆயுதங்களைச் செய்ததாகத் தெரிகிறது

காலம் செல்லச் செல்ல இவர்கள் உபயோகிக்கும் ஆயுதங்களில் செப்பனிடும் முறைகள் அதிகம் கையாளப்பட்டு செய்திறனில் ஒரு படிமுறை வளர்ச்சி கண்டுள்ளனர். இக்காலங்களில்  கூழாங் கற்களாலும்  முழுக்கற்களிலிருந்து உடைக்கப்பட்ட கற்களாலும்  ஆயுத  பயன்பாடு  வளர்ந்தது. இந்த  வளர்ச்சியை  தழும்புரியில் இருந்து  தழும்பழி  வளர்ச்சி  என்று கூறுகிறர்.

தமிழகத்தில் கீழைப்பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள் பல  அறியப்பட்டுள்ளன. வடதமிழகத்தில்  கீழைப்  பழங்கற்கால மனிதர்களின் பரவல்  அடர்ந்து  காணப்படுகிறது. தென்பகுதிகள் காடு அடர்ந்த பகுதிகளாய் இருந்ததால் அது கீழைப்பழங்கற்கால மனிதர்களை ஈர்க்கவில்லை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து.


                                                                                                                                 • 1.1.2 சுமார் கி.மு. 50,000 - 20,000 -
         தமிழகத்தில் மத்திய பழங்கற்காலம்.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

மத்திய பழங்கற்காலம் - கோர்த்தலை ஆற்றங்கரை, அத்திரம் பாக்கம், புத்தமனுவங்கா, குடியம் குகை, மதுரை மறத்தாறுக் கரையிலுள்ள பட்டுப்பட்டி, சிவராமப்பேட்டை, திருப்பத்தூர் என  அறியப்படுகிறது  .

தமிழகத்தில் மத்திய பழங்கற்காலம் என்பது கிமு. 50,000 - கி.மு.20,000 வரை நிலவியது. இக்கால மக்கள்  பெரியதோர் தொழில்நுட்ப மாற்றங்களைப் பெற்றிருந்தனர்... தொழில் நுட்பத்திலும் வேட்டை தொழிலும் பெரிய  திருப்பு  முனை இருந்தது.

கடினக்  கல்லாயுதங்களான தழும்புரி, தழும்பழி போன்ற ஆயுதங்களிலிருந்து  '''செதிற்கல்லாக'''  வளர்ந்தது. இவர்கள் செதிற்கல்லிருந்து வில் தயாரிக்கும் தொழில்நுட்பம் கற்றுக் கொண்டனர்.

கோடாரி, ஈட்டி போன்ற சிறிது தூரம் செல்லும் இலக்கு ஆயுதங்கள் குறைந்து வில் போன்ற நீண்ட இலக்கு ஆயுதங்கள் தயாரிக்கப் பட்டன.


சுரண்டல் கருவிகள், துளைக்கருவிகள், கூர்க்கருவிகள் போன்றவற்றை தமிழகத்தின் கற்காலத்தவர் செய்துள்ளதாகத் தெரிவதால் இக்கால மக்கள் மரவுரி, மிருகத்தோல் வகை ஆடைகளாகப்  பயன்படுத்தியது தெரிகிறது. இக்காலத்திலேயே மனிதன் தற்போதைய உருவம் அடைந்தான்

                                                                                                                         
• 1.1.3 சுமார் கி.மு. 20,000 - 10,000 -
        தமிழகத்தில் மேலைப் பழங்கற்காலம்.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

மேலைப் பழங்கற்காலம் - குடியம் குகை

தமிழகத்தில் மேலைப் பழங்கற்காலம் கி.மு. 20,000 முதல் கி.மு. 10,000 வரை நிலைத்திருந்தது.

தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம், மத்திய பழங்கற்காலம் செழித்திருந்த அளவு மேலைப் பழங்கற்காலம் வளரவில்லை என்றாலும் திருவள்ளூர் மாவட்டம் , குடியம் குகையில் இவை  காணப்படுகின்றன.

தமிழகத்தில் வாழ்ந்த இக்கால மனிதர்கள் ஒரே கல்லில் பல சமாந்தர  பக்கங்களையுடைய சிறிய நீள்சதுர  ஆயுதங்களை அமைக்கக்  கற்றுக் கொண்டார்கள்.

இவை வட  இந்தியா மற்றும் ஐரோப்பாவில் கிடைக்கும் அளவு செழித்திருக்கவில்லை என்றிருந்தாலும் இதில் மேலாய்வுகள் வேண்டியுள்ளது. அதுவரை  தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம் அடுத்து   இடைக்கற்காலம்  திடீரென முளைத்ததாகவே ஆராய்ச்சியாளர்கள்  கொண்டிருப்பர்.

                                                                                                                             
  • 2.   சுமார் கி.மு. 10,000 - 2,000 -
      தமிழகத்தில் இடைக்கற்காலம் அல்லது
      தமிழகத்தில் குறுனிக்கற்காலம்.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
தமிழகத்தில் இடைக்கற்காலம் அல்லது தமிழகத்தில் குறுனிக்கற்காலம் கி.மு. 10,000 முதல் கி.மு. 2,000 வரை நிலவியது.

இடைக்கற்காலம் - தேரி (திருநெல்வேலி), அழுதகன்னி ஆற்றுப் படுகை / ஓடை  , மதுரை மாவட்டம் (மதுரை, திருமங்கலம் , கொல்லம் பட்டறை, போடி நாயக்கனூர், தாதனோடை மேடு, பெரியகுளம், கல்லுப்பட்டி, சிவரக்கோட்டை, கருவேலம்பட்டி, சென்னப்பட்டி.)

 திருநெல்வேலி மாவட்ட  தேரியின் மணல்  மேடுகள் 20 - 50 அடி  உயரத்தில் காணப்படுகின்றன. இவை அக்கால கடல் மட்ட ஏற்ற இறக்கங்களைக் காட்டுவதாய்  அமைந்துள்ளன. இத்தேரியில்  இடைக்கற்கால  & புதிய கற்கால கருவிகளும் ஒரு  சேர  காணப் படுகின்றன. இவற்றில் காணப்படும் செம்மண் படிந்த கருவிகள் காலத்தால் முந்தியவையாகவும் வெண்மண் படிந்த கருவிகள் காலத்தால் பிந்தியவையாகவும் விளங்குகின்றன.

இவர்கள் தமிழகம் முழுதும் பரந்திருந்தனர் . இக்காலத்திலேயே உலகத்தின் அனைத்துப் பகுதிகளைப் போலவும் தமிழகத்திலும் நிரந்தரக் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டது  மாந்தரினம்.

                                                                                                                             
• 3.  சுமார் கி.மு. 3000-1,000 - 
     தமிழகத்தில் புதிய கற்காலம்.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

புதிய கற்காலம் - பையம்பள்ளி , செம்பியன் கண்டியூர்

கற்காலத்தின் கடைசிக்  கட்டமான புதிய கற்காலம் தமிழகத்தில் கி.மு. 2000  வரை  நிலவியது. அதன்  பிறகு  பெருங்கற்களை கொண்டு வழிபடுதல், உலோகக் கருவிகள் போன்றவை அதிகம் வழக்கில் வந்தவுடன் கற்காலம்  தமிழகத்தில் வழக்கொழிந்தது.

தமிழகத்தில் புதிய கற்காலம் என்பது கி.மு. 3000 -  1000 வரை நிலவியது. இக்காலத்தில் மேம்பட்ட தொழிலாய் மட்பாண்டம் செய்தல் இருந்தது.

கொள்ளு, பச்சைப்பயறு, ஆடு, மாடு, பன்றி, மான் போன்ற மிருகங்களையும் வளர்த்தனர். அதிலிருந்து வரும் பொருட்களை உணவிற்கு பயன்படுத்தினர். இக்காலத்திலும் மக்கள் தமிழகம் முழுதும் பரந்து வாழ்ந்ததாகவே தெரிகிறது.

                                                                                                                   
•  தமிழக  கற்கால  வரலாறு  மென்மேலும்  செழுமை நோக்கி  நகர்கிறது.



https://amudu-gowripalan.blogspot.com/2015/09/blog-post_72.html?fbclid=IwAR2uWSHWTwcdZKdMbbqImQshik0D2FoKozBj7L8gQ7cPP-80kAA8jlmrOME புதையுண்ட தமிழகம்

https://tamil.pratilipi.com/read?id=4660984131092480  ஏற்காடு - புதிய கற்காலம் 

http://arivomarivippom.blogspot.com/2016/05/blog-post_7.html குத்துக்கள்

https://tnarchsites.blogspot.com/2014/05/3.html?spref=fb&fbclid=IwAR1WOeSqhZzA-SKYAJ5Qf6DnuAdAH4IzXERb09-bfWu_tA6W8N9RgcDrA5Y மேட்டூர் - பெருங்கற்கால கல்வட்டம்


https://tamil.thehindu.com/incoming/64-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7596458.ece?fbclid=IwAR1y8_9VGh0I3qqkRmh6D4xNhZfwnFJV0VzFp50kKUP3UBYBqS6r0onwTw4  பழனி

http://www.sarithiram.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/  திருவள்ளூர்

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D 
பொது - உலக  கற்காலம்





No comments: